தமிழர்களுக்காக போராடும் இலங்கை நீதிபதி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும்இலங்கை உச்ச நீதிமன்ற புதிய நீதிபதி விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து டெய்லி மிரர் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:

இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள சி.வி.விக்னேஷ்வரன் சிறுபான்மை மக்கள்சங்க உறுப்பினர். இவர் கூறுகையில், இலங்கையில் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் உயர் பதவிகளில்இல்லை.

தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழை ஆட்சி மொழியாகஅறிவிக்க வேண்டும்.

தமிழ் மொழி பேசும் நான் எனது தாய் மொழியை பேசாவிட்டால், அடுத்த மொழியைப் பேசும் கட்டாயத்திற்குத்தள்ளப்படுவேன்.

இலங்கையில் 1956 ம் ஆண்டு பண்டாரநாயகா அதிபராக இருந்த போது இலங்கையில் சிங்கள மொழி ஆட்சிமொழியாகவும், தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாகவும் இருக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட்டது.

இருப்பினும், இலங்கையில் வாழும் மொழிச் சிறுபான்மையினரான தமிழர்களின் தாய்மொழியான தமிழ்மொழிக்கு உரிய அங்கீகாரம் இதுவரை கொடுக்கப்படவில்லை.

இலங்கையில் நானும், அட்டர்னி ஜெனரல் ஒருவரும் உயர் பதவி வகிக்கும் தமிழர்கள். எங்கள் இரண்டு பேரால்மட்டும் தமிழர்களுக்கு நீதி வாங்கிக் கொடுப்பது மிகவும் கடினமான காரியமாகும் என்றார்.

இவ்வாறு டெய்லி மிரர் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+