தாமதமாகிறது இந்திய போர் விமான தயாரிப்பு
டெல்லி:
இந்தியாவின் இலகுரக போர்விமானங்கள் (எல்.சி.ஏ.) தயாரிப்பு திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவை இந்திய விமானப்படையில்சேர்த்துக் கொள்ளப்படுவதும் தாமதமாகி வருகிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தெரிவித்துள்ளார்.
புதனன்று பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.
போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்த தடையால் இலகு ரகு போர்விமானங்கள் தயாரிப்பு திட்டத்தில்தாமதம் ஏற்பட்டு வந்தது.
கடந்த ஜனவரியில் முதன்முறையாக சோதிக்கப்பட்ட இந்த விமானங்கள் 2003ம் ஆண்டில் விமானப்படையில் சேர்க்கப்படும்.
இந்திய விமானப்படையில் முக்கிய பங்காற்றி வரும் மிக் 21 வகை விமானங்கள் சமீப ஆண்டுகளில் அதிகம் விபத்துக்குள்ளாவதால் அவற்றிற்குமாற்றாக இந்திய இலகு ரக போர்விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இவற்றின் தயாரிப்பில் ஏற்பட்டு வரும் தாமதம் காரணமாக, விமானப்படையில் உள்ள மிக்21 வகை போர்விமானங்களை 1200 கோடி ரூபாய்செலவில் மேம்படுத்த ரஷிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இந்த விமானங்கள் பல்வேறு வகை போர் சாதனங்கள் பொருத்திய பின் பரிசோதிக்கப்பட்டு இந்தியவிமானப்படையில் சேர்த்துக் கொள்ள இன்னும் பத்து வருடங்கள் ஆகலாம் என பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications