நீதிமன்ற புறக்கணிப்பில் மதுரை வக்கீல்கள்
மதுரை:
மதுரையில் வழக்கறிஞர்களின் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மதுரை நீதிமன்றங்கள்வியாழக்கிழமையன்று செயல்படவில்லை.
தமிழகத்தின் தென்மாவட்ட மக்களுக்கு வசதியாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை ஒன்றை மதுரையில் அமைக்க பல காலமாக போரட்டம்நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு தரப்பினரின் போராட்டத்திற்குப்பின் கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் மதுரையில் உயர்நீதிமன்றக் கிளைஅமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அடிக்கல் நாட்டி 11 மாதங்கள் முடிந்த போதும் கட்டிடங்கள் கட்டும் பணிகள் துவங்கவில்லை.
இதனையடுத்து, புதன்கிழமையன்று மதுரையில் நடைபெற்ற வக்கீல்கள் சங்க கூட்டத்தில் விரைவில் கட்டிடப் பணிகளைத் துவக்கக் கோரி போராட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வியாழக்கிழமை முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடங்கியது. வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்ததால் விசாரணைக்கு வந்தவழக்குகளை வேறு தேதிகளுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications