ஒரு வழியாய் முடிவெடுக்கிறார் மூப்பனார்: காங்கிரசைக் கை கழுவுகிறார்!
ஒரு வழியாய் முடிவெடுக்கிறார் மூப்பனார்: காங்கிரசைக் கை கழுவுகிறார்!
சென்னை:
காங்கிரசைக் கைகழுவி விட்டு அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்க தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனார் முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதற்கு காங்கிரஸ் கட்சி காட்டி வரும் பிடிவாதமேகுழப்பம் இத்தனை தூரம் நீடித்து வருவதற்குக் காரணம். புதுவை ஆட்சியை யாருக்கும்விட்டுத் தருவதில்லை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி விடாப்பிடியாக உள்ளது.
இந் நிலையில், குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில், காங்கிரஸ் தரப்பில் சிலயோசனைகள் கூறப்பட்டன. அவற்றை அ.தி.மு.க. தரப்பிற்கு மூப்பனார்தெரிவித்துவிட்டார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 55 சீட்டுக்கள் தர வேண்டும் மற்றும் புதுவையில்முதல் பாதி ஆட்சியை காங்கிரஸுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே அந்தயோசனைகள். ஆனால் புதுவை விவகாரத்தை ஜெயலலிதா ஏற்றுக் கொள்ள மாட்டார்என்று கூறப்படுகிறது.
அப்படி நடக்கும் பட்சத்தில், காங்கிரஸ் கட்சியைக் கழற்றி விட்டுவிட்டு மூப்பனார்மட்டுமே அ.தி.மு.க. அணியில் ஐக்கியமாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
அப்படி நடந்தால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படலாம்.கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 10 இடங்கள் வழங்கப்படலாம்.
ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு 27 இடங்களை வழங்கியுள்ளார் ஜெயலலிதா.எனவே அ.தி.மு.க. 135 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் நிலை ஏற்படும்.
கூட்டணி குறித்து வியாழக்கிழமை இரவுக்குள் அல்லது வெள்ளிக்கிழமை காலைக்குள்முடிவு தெரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications