பொதுக் குழுவைக் கூட்டுகிறது பா.ம.க
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் வரும் 14-ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.
இதுகுறித்துக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி அண்ணா நகர் கிருஷ்ணஸ்ரீ திருமண மஹாலில்நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு 14-ம் தேதி தேனாம்பேட்டை காமராஜர்நினைவரங்கில் நடைபெறும்.
கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிப்பார். நான் தலைமை வகிக்கிறேன். பொதுச்செயலாளர் இ.பொன்னுச்சாமி எம்.பி. வரவேற்புரை நிகழ்த்துவார்.
கூட்டத்தில் புதிய தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்.
24-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள மாநாடு குறித்தும், தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்தும் இந்தப்பொதுக்குழுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications