நாளை தி.மு.க.-பா.ஜ.க. பேச்சு
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதா வெள்ளிக்கிழமை தேர்தல்தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு தி.மு.கவுடன் பேச்சு நடத்தவுள்ளது.
தி.மு.க தரப்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தோழமைக் கட்சிகளுடன்பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக புதன்கிழமை ம.தி.மு.கவுடன்பேச்சு வார்த்தை நடந்தது.
தி.மு.க தரப்பில் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன்ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் வெள்ளிக்கிழமைபா.ஜ.க.வுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
பாரதீய ஜனதாக் குழுவில் பொதுச் செயலாளர் இல. கணேசன்,பொன்.ராதாகிருஷ்ணன், வேலாயுதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.இக்குழுவினர் தாங்கள் கேட்கும் தொகுதிகள் குறித்து தி.மு.க குழுவுடன்பேச்சுவார்த்தை நடத்துவர்.
62 தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க கூறி வருவதுநினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications