சாராயத்தை ஒழிக்க மதுரை பெண்கள் தீர்மானம்
மதுரை:
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மதுரையில் கொண்டாடப்பட்ட பெண்கள் தின கருத்தரங்கில் கள்ளச் சாராயத்தை முழுவதுமாக ஒழிக்க வேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்கள் தினத்தையொட்டி நடந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரம் வருமாறு:
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பெண்களுக்கு அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும். பெண்களுக்கு வீடு கட்ட நிலம் கொடுக்கப்பட வேண்டும்.
குடிசை வாழ் மக்கள் மேம்பாட்டுக்கான தேசிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏழை எளியோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். பெண்களைக் கொடுமைப்படுத்துவோருக்கு அதிக பட்ச தண்டனைவழங்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
யு.என்.ஐ.