ஷார்ஜா போட்டி : இந்தியா கலந்து கொள்ளுமா?
துபை:
ஷார்ஜா போட்டியில் இந்தியா கலந்து கொள்ளும் என நம்புவதாக இப்போட்டியை நடத்தவுள்ள அமைப்பின் தலைவரான அப்துல் ரெஹ்மான் புகாதிர்தெரிவித்துள்ளார்.
கல்ப் நியூஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள தகவல்கள்:
ஷார்ஜா போட்டி பற்றிய பேட்டியின் போது புகாதிர் இந்திய அணி ஷார்ஜா போட்டியில் பங்கேற்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியுடன் பாகிஸ்தான் அணியும் இத்தொடரில் பங்கேற்பதால் இந்திய அணி பங்கேற்பது குறித்து இதுவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
இந்திய விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெப்சைட் ஒன்றில் கூறப்பட்டுளள செய்தி தவறானது.
இந்திய கிரிக்கெட் வாரியம் அழைத்ததால் மும்பை டெஸ்டை காணச் சென்றார்.
ஏப்ரல் 8 முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள ஷார்ஜா போட்டிக்கு இதுவரை இந்திய தரப்பிலிருந்து பதிலில்லை.
இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி தந்தாலும் இந்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்காதது போட்டியை ஏற்பாடு செயதவர்களுக்குஏமாற்றமளிப்பதாக உள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானுடனான டொரண்டோ போட்டியில் விளையாட இந்திய அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அது போன்று தறபோதைய ஷார்ஜா போட்டிக்கும் அனுமதி மறுக்கப்படக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications