For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எஸ்.எஸ்.சந்திரனை வெட்ட முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயலலிதா பிறந்த நாள் விழா தொடர்பாக நடத்தப்பட்ட அ.தி.மு.க.பொதுக்கூட்டத்தில் வெறித்தனமான தாக்குதல் நடந்தது.

இதில், நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சென்னை எழும்பூர் வட்டார அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது. இதையொட்டி சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல் பகுதியில்,புதன்கிழமை பொதுக்கூட்டம் நடந்தது.

இரவு 7 மணிக்குக் கூட்டம் துவங்கியது. பலர் பேசிய பிறகு 9.30 மணியளவில்சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பேசத்தொடங்கினார்.

அப்போது திடீர் என ஒரு கும்பல் அங்கு வந்தது. அங்கிருந்த டியூப் லைட்டுகளைஅவர்கள் உடைத்தனர். பிறகு தொட்டி நிறைய கொட்டி வைக்கப்பட்டிருந்த கற்களைஎடுத்து கூட்டத்தினர் மீது வீசத்தொடங்கினர்.

அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது.

கல்வீச்சில் இறங்கிய கும்பல் பின்னர் மேடையை நோக்கி முன்னேறியது. மேடையில்இருந்த நடிகர் எஸ்.எஸ். சந்திரனை அரிவாளால் தாக்க அவர்கள் முயன்றனர்.

ஆனால் மேடையில் இருந்த அ.தி.மு.கவினர் அவரைச் சுற்றி நின்று காப்பாற்றினர்.பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இந்தக் கல்வீச்சு கலாட்டாவில் 2 பேர் காயமடைந்தனர். அரிவாள் வெட்டில் 6 பேருக்குகாயம் ஏற்பட்டது.

சம்பவத்தைக் கண்டித்து, அ.தி.மு.கவினர் சேத்துப்பட்டு காவல்நிலையம் முன் திரண்டுமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக துணைக் கமிஷனர்கள் சந்திரசேகர்,துரைராஜ், உதவிக் கமிஷனர்கள் ரங்கராஜன், அந்தோணிசாமி ஆகியோர் விரைந்துவந்து கூட்டத்தினரை அமைதிப்படுத்தினர்.

சேத்துப்பட்டுப் பகுதியில் மீண்டும் கலவரம் வெடித்து விடாமல் தடுக்க பலத்த போலீஸ்பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X