இன்றைய தினப்பலன்
கேள்வி - பதில்
கே:வேதங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள் என்று விழுந்து, விழுந்து படிக்கும் சோ, தமிழ் இலக்கியங்களை படிப்பதில்லை என்று சிலர் குற்றம்சாட்டுவதுபற்றி ...?
ப: இதிலிருந்தே, தமிழ் இலக்கியங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் என்பது புரியவில்லயாை?
கே:குடியரசு தினத்தில் குஜராத்தில் நடந்த பூகம்பத்திற்கு, கும்பமேளாவில் சோனியா காந்தி கலந்து கொண்டதுதான் காரணம் - என்று சில தீவிரஹிந்துக்கள் கூறுவது பற்றி...?
ப: பிதற்றல். பல அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட கும்பமேளாவில் கலந்து கொண்டார்கள். அவர்களால் வராத விபத்த சோனியாவால் வந்துவிட்டதா?
இதற்கு முன்னால் ஏற்பட்ட பூகம்பங்களுக்கு என்ன விளக்கம்? புயல், வெள்ள சேதங்களுக்கு என்ன விளக்கம்? நீங்கள் சொல்கிற மாதிரிபேசுகிறவர்கள் வெறும் துவேஷ பிரச்சாரம் செய்பவர்கள்.
கே: துக்ளக் எச்சரிக்கை பகுதியில் சோ எழுதியதால்தான், முதல்வர் கருணாநிதியை, நடிகர் ராஜ்குமார் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது என்று நான் கூறுகிறேன். சரியா?
ப: சரிதான், போங்கள்! இப்படியே போனால், தீவிரவாத குழுக்களை தடை செய்ய வேண்டும் என்று தி.மு.அரசு எழுதியதும் - நான் துக்ளக்கில்எழுதியதைப் படித்து விட்டுதான் என்று கூட சொல்லி விடுவீர்கள் .
வீரப்பனை தேடுவதில் கடுமை காட்டப்படுகிறது என்கிறார்களே - அது கூட துக்ளக்கில் எழுதியதை வைத்துத்தான் என்று கூட சொல்வீர்கள். தி.மு.க. துக்ளக்கை பாரத்து அவ்வளவு பயப்படுகிறதா, என்ன?












Click it and Unblock the Notifications