இன்றைய தினப்பலன்
கேள்வி - பதில்
கே:ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியை ஆயுள்காலம் வரை சிறையில் வைப்பேன் என்று பேசிய ஜெயலலிதாவுக்கு, தாங்கள் சட்ட உதவி செய்வது (ஊழலில்இருந்து தப்பிக்க) எந்த விதத்தில் நியாயமானது?
ப: ஜெயலலிதாவின் இந்த மாதிரி பேச்சுக்கள் பற்றி ஏற்கனவே நான் கண்டனம் தெரிவித்திருக்கிறேன். இது ஒருபுறமிருக்க, அவருக்கு சட்டரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ நான் எந்த உதவியும் செய்யவில்லை.
கே:அரங்கநாதர் கோயிலுக்கும் சென்று கொண்டு, தேசிய லீக்கின் மதச்சார்பற்ற மாநாட்டிலும் பங்கு கொள்ளும் ஜெயலலிதாவின் ஸெக்யுலரிஸம்பற்றி ...?
ப: குங்குமப் பொட்டு, தீ மிதித்தல் போன்றவற்றைக் கண்டித்துக் கொண்டு, ரம்ஜான் நோன்பில் கஞ்சி குடிக்கும் ஸெக்யுலரிஸத்தைப் போன்றதுதான் இதுவும்.
கே: ஒரு வழியாக ராஜ்குமார், சென்னை வந்து கலைஞருக்கு நன்றி சொல்லி விட்டாரே?
ப: என்ன பிரயோஜனம்? முதல்வருக்கே அதில் திருப்தியில்லை. அதனால்தான் இதை ஒரு பெரிய செய்தியாக்காமல் விட்டு விட்டார்கள். ராஜ்குமார்அதிகமாக நிருபர்களிடம் பேசி விடாமல் திரும்பிப் போய்ச் சேர்ந்தாரே - அதில்தான் முதல்வருக்கு முழு திருப்தி இருக்கும்.
கே: குஜராத் பூகம்பப் பேரழிவுக்கு பாகிஸ்தான், வலிய அனுப்பிய நிவாரணப் பொருட்களை இந்தியா பெற்றுக் கொண்டது சரியா ...?
ப: இதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.