பாண்டிச்சேரியில் மாசி மகம் திருவிழா
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் வெள்ளிக்கிழமை மாசி மகம் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
பாண்டிச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வந்திருந்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமகம்திரு விழாவைக் கொண்டாடினார்கள். திருவிழாவையொட்டி வைத்திக்குப்பம் கடற்கரையில் மயிலம் முருகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.
மயிலை முருகருக்கு பூஜைகள் செய்யப்பட்ட போது தீர்த்தவரை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
மாசிமகம் நிகழ்ச்சியின் போது எவ்வித அசம்பாவிதச் சம்பவமும் நடந்து விடக் கூடாது என்பதற்காகவும், சட்டம்- ஒழுங்கு நிலையை காக்கும்வகையிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications