ஜெ.-மூப்பனார் சந்திப்பு: கூட்டணி உறுதியானது
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகளிடையே ஒரு வழியாக தேர்தல்கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்போயஸ் கார்டன் சென்று நேரடியாக சந்தித்துப் பேசினார். இதில் தான் கூட்டணி இறுதிசெய்யப்பட்டது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடுஏற்படுவதில் சுணக்கம் நிலவி வந்தது. காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்து மூப்பனாரே பேசிவந்தார்.
காங்கிரஸ் கட்சியின் சில திட்டவட்டமான கோரிக்கைகளை மறுக்க மூப்பனாரால்டியவில்லை. ஆனால் காங்கிரஸின் புதுவை ஆட்சியை விட்டுக் கொடுக்க வேண்டும்என்ற பிடிவாதமான கோரிக்கையை ஏற்க ஜெயலலிதா மறுத்து விட்டார்.
இதனால் சிக்கல் நீடித்து வந்தது.
இந் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கூட்டணி தொடர்பானபேச்சுவார்த்தைகள், விவாதங்கள், ஆலோசனைகள் சூடுபிடிக்கத் துவங்கின.
இறுதியாக வெள்ளிக்கிழமை இரவு மூப்பனார், ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டன் இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.
அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முடிவை ஜெயலலிதாவிடம், மூப்பனார்தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுடன் தொகுதிப் பங்கீடு குறித்தும்மூப்பனார் பேசியதாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டு வெளியே வந்த மூப்பனாரிடம் தொகுதிப் பங்கீடுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது சனிக்கிழமை அறிவிக்கிறேன் என்று மட்டும்கூறி விட்டுச் சென்று விட்டார். ஜெயலலிதாவும், இன்று சொல்வதற்கு ஒன்றுமில்லைஎன்றார்.












Click it and Unblock the Notifications