மானை அடித்துத் திண்ற 4 பேருக்கு 50 ஆயிரம் அபராதம்
சேலம்:
சேலம் அருகே மான் குட்டியை ரசித்ததோடு நில்லாமல், அதை அடித்து சமைத்து ருசி பார்த்த நான்கு பேருக்கு ரூ. 50 ஆயிரம்அபராதம் விதித்தார் வனத் துறை அதிகாரி.
சேலம் அருகே உள்ள முட்டல் பூமரத்துப்பட்டி உள்ளது. இந்த கிராமத்திற்கு தண்ணீர் அருந்த ஒரு மான் குட்டி வந்தது. நீர் அருந்திக்கொண்டிருந்த அந்த மான்குட்டியை ஒருவர் கண்டார். "அடடா, எவ்வளவு அழகான மான் எனக் கூறி அவர் தனது நண்பரைஅழைத்துக் காட்டினார்.
அவரும் அவ்வாறே கூற நண்பர்கள் கூட்டத்தின் எண்ணிக்கை நான்கானது. நால்வரும் சேர்ந்து மானைப் பிடித்து ருசிக்கலாம் எனதிட்டம் தீட்டினர். அதன்படி மானை பிடித்து அடித்து கொன்றனர்.
பின்னர் அந்த மானை சமைத்து உண்டனர். இந்த சம்பவத்தை மோப்பம் பிடித்த வனத்துறைக் காவலர்கள், பூமரத்துப் பட்டியைச்சேர்ந்த முருகேசன், செல்லப்பன், குமாரசாமி, அசோகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு வனத் துறை அதிகாரியிடம்சென்றானர்.
அங்கு வனத்துறை அதிகாரி யோகேஷ் திவேதி, அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மானைப் பிடித்து சமைத்துச்சாப்பிட்டதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மேலும், மானைப் பிடிப்பது குற்றம் என்பதை அறியாமல் செய்து விட்டோம் எனமன்னிப்புக் கேட்டனர்.
இவர்கள் நான்கு பேருக்கும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் அதிகாரி.












Click it and Unblock the Notifications