திமுகவிடம் 5 தொகுதி கேட்கிறது உழவர் உழைப்பாளர் கட்சி
ஈரோடு:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்களுக்கும் 5 இடம் வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு அணியில் நின்று, எங்காவது ஓரிரு இடங்களைப் பெற்று வெற்றி தோல்வியைச் சந்தித்துவந்துள்ளது உழவர் உழைப்பாளர் கட்சி. இக் கட்சியின் தலைமையகம் திருப்பூரில் செயல்பட்டு வருகிறது.
திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓரளவு செல்வாக்கு இந்தக் கட்சிக்கு உண்டு. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நாரயணசாமிநாயுடு தலைமையில் விவசாயிகள் சங்கமாக உருவாகியது. பின்னர் அரசியல் கட்சியாக உருவாகியது.
15 ஆண்டு காலத்தில், எவ்வித வளர்ச்சியுமின்றி குறும் கட்சியாகவே உள்ள இந்த கட்சிக்கு செல்லமுத்து தலைவராக உள்ளார்.
கடந்த பல தேர்தல்களில் இந்தக் கட்சி சில தொகுதிகளில் நின்று வென்றுள்ளது. இக் கட்சிக்குப் பக்கபலமாகக் கூட்டணிகள்மட்டுமே இருந்து வந்துள்ளது. கபிலர்மலை, கிணத்துக் கடவு, பொங்கலூர் ஆகியவற்றில் தொடர்ந்து ஏதாவது ஒரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது இக்கட்சி.
இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 5 இடங்களைக் கேட்டுப் பெற முடிவு செய்துள்ளது.
இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உழவர் உழைப்பாளர் கட்சி தொகுதிப் பங்கீடு குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் கருணாநிதியுடன்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வரும் 13ம் தேதி இறுதி முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
பொங்கலூர், பல்லடம், கோபி, குறிஞ்சிப்பாடி, ஒட்டன்சத்திரம், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். மேற்கண்ட 5 தொகுதிகளையும் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் கேட்டுப் பெறுவோம்.
அ.தி.மு.க அணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்ததால் அ.தி.மு.க.,விற்கு ஒன்றும் லாபம் இல்லை. மாறாக பாட்டாளி மக்கள்கட்சிக்குத் தான் லாபம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறு கட்சிகளான மனித உரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றதால் தலித்துகளின் ஓட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தென்னை விவசாயத்தை மேம்படுத்தவும், தொழிலாளர்களின் நலன் காக்கவும் கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைப்போம் என்றார்செல்லமுத்து.
-
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications