For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொந்த மண்ணில் கேப்டனாக களமிறங்கும் கங்குலி

By Staff
Google Oneindia Tamil News

கோல்கத்தா:

இந்திய அணியின் பலம் அதன் பேட்டிங்கே. எனவே, பேட்டிங் வரிசையில் மாற்றமில்லை என்கிறார், சொந்த மண்ணில் அணித்தலைவரான பின் முதன்முறையாககளமிறங்கும் செளரவ் கங்குலி.

கோல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சிக்கு வந்த கங்குலி நிருபர்களுடன் பேசும் போது,

மும்பை டெஸ்டில் சரியாக ஆடவில்லை என்பதற்காக இந்தியாவின் பேட்டிங் வரிசை மாற்றப்பட மாட்டாது. இந்தியாவின் பலம் அதன் பேட்டிங்தான்.

2வது போட்டியில் கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற முன்னணி பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரிய குறை. இருந்தாலும், இந்த நேரத்தில் புதிய வீரர்களுக்குதிறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற வீரர்களை நம்பி இருக்க முடியாது.

எல்லா வீரர்களுக்கும் சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்படும். அதுபோல்தான் தனக்கு மும்பை டெஸ்டில் ஏற்பட்டது. அதன் பாதிப்பு இந்தியாதோல்வியை தழுவியது.

கோல்கத்தா மைதானத்தில் இந்திய அணித்தலைவராக போட்டியில் பங்கேற்பது இதுவே முதல்முறை. சிறப்பான முறையில் வீரர்கள் விளையாட வேண்டும்.கடந்த 2 போட்டிகளின் போது நடைபெற்ற ரசிகர்களின் கலாட்டா இந்த முறை ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டார் கங்குலி.

இதனிடையே, 2வது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியாவின்தொடர் வெற்றியை தடுக்கும்.

மாறாக, ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், இந்திய மண்ணில் 31 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.

இந்திய வீரர்களில் டெண்டுல்கரின் விக்கெட்டை கைப்பற்றுவதில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களிடையே போட்டியே நடக்கிறது.

இந்திய அணியில் ஜாகீர் கான், வெங்கடேஷ் பிரசாத் தவிர வெங்கடபதி ராஜூவும், ஹர்பஜன் சிங்கும் இடம் பெறலாம். 6 பேட்ஸ்மேன்களையும், 4பெளலர்களையும் கொண்டு இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X