கருணாநிதியே மீண்டும் முதல்வர்: தமாகா எம்.எல்.ஏ
திண்டுக்கல்:
வரும் சட்டசபைத் தேர்தலில் தி. மு.க வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக கருணாநிதி ஆட்சியைத் தொடர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்உறுப்பினரும், நிலக்கோட்டைத் தொகுதி எம்.எல்.ஏ வுமான பொன்னம்மாள் பேசினார்.
தமிழ் மாநில காங்கிரஸ், அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தபிறகு "தலையில் இருந்து வால் வரை இப்போது எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியுள்ளது.ப.சிதம்பரம், ஹாரூன், பொன்னம்மாள் என தொடர்ந்து அடிமட்டத் தொண்டர்கள் கூட இப்போது அதிருப்தியில் இறங்கியுள்ளனர்.
இதனை நிரூபிக்கும் வகையில், வத்தலக்குண்டு அருகே உள்ள ஆடுபட்டியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸின் நிலக் கோட்டைஎம்.எல்.ஏ.வான பொன்னம்மாள் பேசியதாவது:
கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நிலக்கோட்டைத் தொகுதிக்கு நிறைய நன்மைகள் கிடைத்துள்ளது. அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன.இங்கே ஒரு கல்லூரியைக் கட்டவும் அனுமதி கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட தி. மு.க தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியை பாராட்டாமல்இருக்க முடியாது.
மக்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது ஆதரவுஅவருக்குத்தான். இந்த ஆட்சியில் தான் தமிழகம் முழுவதிலும் அதிகமான இடங்கள் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிக பாலங்கள்அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
இவ்வாறு பேசியதன் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ்சில் அதிருப்தி கோஷ்டி உருவாகியிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications