மூப்பனார் கலந்து ஆலோசிக்கவில்லை: சிதம்பரம் புகார்
சென்னை:
அதிமுக கூட்டணி தொடர்பாக மூப்பனார் என்னுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் கூறியுள்ளார்.
அதிமுக-தமாகா கூட்டணியைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டார் சிதம்பரம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா தேர்தல் பணிக்குழுஉறுப்பினர்களான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
அதில், ப.சிதம்பரம் தேர்தல் பணிக்குழுக் கூட்டத்திற்கே வரவில்லை. அப்படியிருக்கும்போது அவரிடம் எப்படி ஆலோசனை நடத்துவது என்றுகேட்டிருந்தனர். அதை தற்போது சிதம்பரம் மறுத்துள்ளார்.
திங்கள்கிழமை மாலை அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் பணிக்குழுவில் உறுப்பினராக விரும்பவில்லை என்று ஏற்கனவே மூப்பனாரிடம்தெரிவித்து விட்டேன். அப்படியிருக்கும்போது அதில் எடுக்கப்படும் முடிவுகள் எனக்குத் தெரியும் என்று கூறுவது எப்படி?
பாண்டிச்சேரியில் ஆட்சியமைக்க வாய்ப்பு தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிபந்தனை போட்டு தொகுதிப் பங்கீடு செய்துள்ளது. ஆனால் அந்தத்தைரியும் கூட த.மா.காவுக்கு இல்லையே என்பது வருத்தமாக உள்ளது.
கூட்டணியை மூப்பனார் மறுபரிசீலனை செய்ய வேண்டும். முடிவு அவர் கையில்தான் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications