மதிமுகவுடன் நாளை 2-வது சுற்றுப் பேச்சு
சென்னை:
மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று திமுக பொருளாளரும், அமைச்சருமான ஆர்க்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சென்னையில் புதிய தமிழகம் கட்சியுடன் செவ்வாய்க்கிழமை தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்தபேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வீராசாமி, புதிய தமிழகத்துடனான பேச்சுவார்த்தைதிருப்திகரமாக இருந்தது. இரு நாட்களில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் முடிவாகி விடும்.
மதிமுகவுடன் புதன் அல்லது வியாழக்கிழமை இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போதுஎத்தனை தொகுதிகள் என்பது முடிவாகி விடும்.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு இந்த வார இறுதிக்குள் முடிந்து விடும் என்றார்.
முன்னதாக திமுக குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக புதிய தமிழகம் கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். அவருடன் துரையரசன், வேலுச்சாமி ஆகியோரும் பேச்சுவார்த்தையில்பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications