இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 8 சீட்
சென்னை:
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நல்லகண்ணு இத்தகவலைத் தெரிவித்தார். இதுகுறித்து ஜெயலலிதாமுறைப்படி அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதலில் 6 சீட்டுக்கள் தருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
ஆனால் அவர்கள் 15 சீட்டுக்கள் தர வேண்டும் என்று கோரியிருந்தனர். இதனால் பேச்சவார்த்தையில் முடிவு ஏதும் ஏற்படவில்லை.
பலமுறை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் தற்போது 8 சீட்டுக்கள் தருவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது. இன்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்பு ஏதும்வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications