தொட்டுத் தொடரும் ஆயுத பேர ஊழல்
டெல்லி:
மீண்டும் மீண்டும் தாக்கும் பூகம்பம் போல் இந்தியாவின் பாதுகாப்புத்துறையை மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளது ஆயுத பேர ஊழல்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியை இழக்க காரணமான போபோர்ஸ் பேர ஊழலுக்கு அடுத்த மிகப்பெரிய ஊழல்தற்போது நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு தேவையான ஆயதங்களை ரஷ்யா மட்டும் விநியோகம் செய்த போது வராத ஊழல் பிரச்சனை மற்றநாடுகளிடம் ஆயுதங்களை வாங்க முற்பட்டபோது வெளிப்பட்டது.
சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெறும் வழக்கத்தை இந்திராகாந்தி ஆரம்பித்து வைக்க அதனை ராஜீவ்காந்தி தொடர்ந்தார். இதில் சுவிஸ் நாட்டின் போபோர்ஸ் பீரங்கிகளை வாங்கியதற்கு லஞ்சம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர், அது ராஜீவ் காந்தி அரசை கவிழ்த்ததோடு இன்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிரான ஆயுதமாகபா.ஜ.க.வால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின், சுகோய் ரக விமானங்கள் மற்றும் ரஷியாவின் டி-90 வகை டாங்குகள் வாங்கியதில் ஊழல்நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து 1985ம் ஆண்டிற்குப்பின் முடிவு செய்யப்பட்ட ஆயுத பேரங்கள் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்ணாண்டஸ் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டார்.
இந்த விசாரணை நடந்து கொண்டிருப்பதால் பாதுகாப்புத்துறைக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவது குறித்துமுடிவெடுக்க அதிகாரிகள் தயங்கி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆயுதங்கள் வாங்க புதிய ஒப்பந்தம் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை.
தற்போதைய வாஜ்பாய் ஆட்சியில் தான் கார்கில் போர் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகள் தொல்லை போன்ற காரணங்களால்ராணுவத்தை நவீனபடுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய் கிழமையன்று வெளியிடப்பட்ட ஆயுத பேர ஊழல் தொடர்பான தகவல்களை தொடர்ந்து இந்திய ராணுவத்தைநவீனப்படுத்தும் முயற்சி பாதிக்கப்படக் கூடும்.
இது போன்ற ஊழல்கள் மீடியாக்காரர்கள் மூலம் வெளி வருகின்றன. போபோர்ஸ் ஊழலை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைவெளியிட்டு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போதைய ஊழலை தனியார் வெப்சைட் நிறுவனம் தெஹல்கா டாட்காம் வெளிப்படுத்தியுள்ளது. இதே தெகல்காம் இன்டர்நெட் நிறுவனம்தான் சமீபத்தில் மேட்ச் பிக்ஸிங் ஊழலை அம்பலமாக்கியதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications