அவசரமாகக் கூடுகிறார்கள் தே.ஜ.தலைவர்கள்
டெல்லி:
ஆயுதப் பேர ஊழல் வழக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலை-வர் பங்காரு லட்சுமண் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் புதன்கிழமை மாலை4.30 மணிக்குக் கூடுகிறது.
முன்னதாக, ஆயுதப் பேர ஊழல் குறித்து வாஜ்பாய் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ்உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன.
இதைத்தொடர்ந்து பிரதமர் வாஜ்பாய் வீட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனைநடத்துகிறார்கள். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தலைமையில் புதன்கிழமை காலை பாரதிய ஜனதாகட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அத்வானி நிருபர்களிடம் கூறுகையில், பாரதிய ஜனதாக் கட்சி ஆயுதப் பேரஊழல் குறித்து எந்த விதமான விசாரணைக்கும் தயாராக இருக்கிறது.
தெகல்கா டாட் காம் நிறுவனத்தார் சாட்டியுள்ள ஆயுதப் பேர ஊழல் வழக்கு குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றார்அத்வானி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications