தேர்தலில் நிற்க வாய்ப்பு கேட்கிறது ஐக்கிய ஜ.தளம்
கோவை:
கடந்த தேர்தலில் இதயத்தில் இடம் கொடுத்த முதல்வர் கருணாநிதி, இந்த முறை எங்களுக்கு போட்டியிட இடம்தர வேண்டும் என கோவையில் ஐக்கிய ஜனதா தளத்தின் அகில இந்தியப் பொதுச் செயலர் கே. ரகுபதிதெரிவித்தார்.
கோவையில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், நிருபர்களுக்கு ரகுபதி அளித்தபேட்டியில் கூறியதாவது:
சென்ற தேர்தலில் நாங்கள் இடம் கேட்டபோது, தமிழக முதல்வர் கருணாநிதி, இதயத்தில் இடம் இருக்கிறது எனக்கூறினார். இந்த முறை, அந்த இதயத்தை திறந்து பாருங்கள், எங்களுக்கும் போட்டியிட வாய்ப்புத் தாருங்கள்எனக் கோரியுள்ளோம்.
தி.மு.க., வுடன் தொகுதி உடன்பாடு குறித்து தொடர்ந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தேர்தலில்கூட்டணியில் இடம் கிடைத்தால் போட்டியிடுவோம். அப்படி இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவதுகுறித்து முடிவு செய்யவுள்ளோம். இது குறித்து அகில இந்திய நிர்வாகக் குழு விவாதிக்கும்.
இந்த நிர்வாகக் குழுக் கூட்டம் வரும் மார்ச் மாதம் 23ம் தேதி நடக்கவுள்ளது. அதற்குள் கூட்டணி, தொகுதிப்பங்கீட்டுப் பிரச்சனை முடிந்து விடாது என நினைக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பேச்சுவார்த்தைக்குஎங்களை அழைக்காவிட்டாலும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் விடமாட்டார்கள்.
எங்கள் பலம் என்ன என்பதை நாங்கள் அறிவோம். இதில் கூடுதலாகவோ, குறைத்தோ கூறாமல் உண்மையைஒப்புக் கொள்கிறோம். எங்களுக்கு தமிழகத்தில் 30 இடங்களில் பலம் உள்ளது. இதில் 6 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளதாக கருதுகிறோம்.
கடந்த 71ம் ஆண்டு முதல் நான் தமிழகத் தேர்தலை கவனித்து வந்துள்ளேன். இதில், மாநிலக் கட்சிகள் துணைஇல்லாமல் தேசியக் கட்சிகள் வெற்றி பெற்றதில்லை என்பதை உணர்ந்துள்ளோம்.
அ.தி.மு.க., வுடன் எந்த அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டது என்பதுதெரியவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்றுள்ள கூட்டணியில்,காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது வியப்பை அளிக்கிறது என்றார் ரகுபதி.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications