சாதனைகளை முறியடித்த லஷ்மண்
கோல்கத்தா:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார் இரட்டை சதமடித்த ஹைதராபாத் வீரரான வி.வி.எஸ்.லஷ்மண்.
கோல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டியில்இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார் லஷ்மண்.
ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களின் பந்தை சாதனைகள் பல புரிய கருவியாக பயன்படுத்திக்கொண்டார் லஷ்மண்.
1958-59 சீரிஸில் இதே ஈடன் மைதானத்தில் ரோகன் கன்னாய் என்ற வீரர் எடுத்த 256 ரன்களே இதுவரை இந்திய மண்ணில் எடுக்கப்பட்டஅதிகபட்ச ரன்களாக இருந்தது.
இதனை முறியடித்த லஷ்மண் ஆஸிக்கு எதிரான இப்போட்டியில் 275 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த 5வதுவீரராகவும் லஷ்மண் திகழ்கிறார்.
இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் மேட்சில் எடுத்த அதிகபட்ச ரன்கள் சுனில் மனோகர் கவாஸ்கரின் 236ரன்களே. கடந்த 18 ஆண்டுகளாக இருந்த அந்தசாதனையையும் முறியடித்தார் லஷ்மண்
கிரிக்கெட் ஜாம்பவான் சர்.டொனால்ட் பிராட்மன் ஒரே இன்னிங்ஸில் 44 பவுண்டரிகள் அடித்ததையும் சமன் செய்தார் லஷ்மண். தொடர்ந்து ஆடவுள்ளலஷ்மண் இன்னும் 9 பவுண்டரிகள் அடித்தால் ஒரே இன்னிங்ஸில் அதிகபட்ச பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
லஷ்மணின் சாதனை பற்றி கேள்விப்பட்ட அவரது தந்தை இச்செய்தி தனக்கு பெருமை அளிப்பதாக கூறினார்.
லஷ்மணின் சாதனையை பாராட்டிய மேற்குவங்காள விளையாட்டுத்துறை அமைச்சர் சுபாஷ் சக்ரபர்த்தி, மே.வங்க அரசு, லஷ்மணுக்கு ஒரு லட்ச ரூபாயைபரிசாக அளிக்கும் என்றார்.
ஹர்பஜன்சிங் டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்ததற்காகவும் மே.வங்க அரசு அவருக்கு ஒரு லட்ச ரூபாயை பரிசாகஅளிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications