கூட்டணியிலிருந்து விலகுவோம்: மம்தா மிரட்டல்
டெல்லி:
பாதுகாப்புத்துறை அமைச்சரின் ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிவிலகி விடும் என அதன் தலைவி மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரயில்வே அமைச்சரான மம்தா பானர்ஜி, பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதியுள்ள 5 பக்க கடிதத்தில், பாதுகாப்புத்துறை ஊழலால் மத்திய அரசு பற்றிதவறான கருத்து நிலவுகிறது.
இந்த ஊழல் தொடர்பாக மத்திய அரசு எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. எனவே, இது தொடர்பாக விரைவானநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். பிரதமரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிகாரிகளின்செயல்பாடு இருக்கக் கூடாது. இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.