கிரிக்கெட்:ஆஸி.யின் தொடர் வெற்றியை தடுத்த லஷ்மண்
கோல்கத்தா:
ஆஸ்திரேலியாவின் தொடர் டெஸ்ட் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இந்தியாவின் வி.வி.எஸ்.லஷ்மண்.
கோல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 445 ரன்களுக்கு பதில் அளிக்க வேண்டிய இந்திய அணி 171 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை இழந்துபாலோ-ஆன் பெற்றது.
இன்னிங்ஸ் தோல்வி அடையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தனது 2வது இன்னிங்ஸை ஆடியது இந்தியா.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் இறுதியில் வி.வி.எஸ்.லஷ்மண், ராகுல் திராவிட்டின் பொறுப்பான ஆட்டத்தால் (பொறுமையான ஆட்டமும் கூட) 4விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை எடுத்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய லஷ்மண்-திராவிட் ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும்முடியவில்லை.
ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளித்த லஷ்மண் 275 ரன்கள் எடுத்தார். டிராவிட்டும் தன் பங்கிற்கு தனது 7 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
5வது விக்கெட்டிற்கு இதுவரை இந்த ஜோடி சாதனை அளவாக 357 ரன்கள் சேகரித்துள்ளதுஆட்ட நேர இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின்ஸ்கோரை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 589 ரன்கள் என்ற நிலைக்கு இந்த ஜோடி இட்டுச் சென்றது.
யு.என்.ஐ.