முல்லைவேந்தனுக்கு முன்ஜாமீன்
தர்மபுரி:
அறநிலையத் துறை அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அவர் தினம் அரூரில் தங்கி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட்டது தொடர்பாகமாவட்ட இந்த அறநிலையத் துறை அதிகாரி அன்புமணி தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அமைச்சர் முல்லைவேந்தன் முன்னிலையில் நடந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில்அமைச்சருக்கும் இந்த தாக்குதலில் தொடர்பு உண்டு என சி.பி.சிஐ.டி போலீசார் தெரிவித்திருந்தனர்.
எனவே, அமைச்சர் பதவியிலிருந்துமுல்லைவேந்தன் ராஜினமா செய்தார். இதையடுத்து, பதவியை ராஜினமாசெய்த முல்லைவேந்தன், கைது செய்யப்படலாம் என்ற காரணத்தால் தலைமறைவானார்.
இந்த நிலையில் அவர் சார்பில் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனு மீது மார்ச் 14ம் தேதி நடந்த விசாரணையில், முல்லைவேந்தனுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதிதீர்ப்பளித்தார். மேலும், அரூரில் தங்கியிருந்து தினம் கலை 10 மணிக்கு உரிமையியல் நீதிமன்றத்தில்கையெழுத்திட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications