புதுவைமுதல்வர் டெல்லி விரைந்தார்
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம் டெல்லிக்குச் சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் தேர்தல் கூட்டணிதொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் சேரும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தமிழகத்தில் அதிமுககூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
ஆனால் பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்கும் உரிமையை விட்டுத் தர அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறுத்து விட்டதால், அந்த அணியில் சேரபாண்டிச்சேரி காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் திடீரென பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் கூட்டணி குறித்து அவர் பேசுவார் என்று தெரிகிறது. திரும்பி வருகையில், கூட்டணிதொடர்பான செய்தியையும் அவர் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications