மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை எதிர்த்து வழக்கு
சென்னை:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சட்டசபைத் தேர்தலில் பயன்படுத்துவதைஎதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தலுக்குப் பயன்படுத்துவது சாதாரணமக்களுக்கு பயன் தராது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட இந்த முறைவெற்றி பெற்றதில்லை. கிராம மக்கள் நிறைந்த நமது நாட்டில் இது நிச்சயம் வெற்றிபெறாது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பல்வேறு குறைகள் இருப்பதை தேர்தல்அதிகரிாயிடம் சுட்டிக் காட்டியுள்ளோம். அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இதைக்குறை கூறியுள்ளன. இதை அமல்படுத்தக் கூடாது என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம் என்று கூறியுள்ளார் மணி.












Click it and Unblock the Notifications