For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

த.மா.கா. கவுன்சிலர் மீது அமைச்சரின் தம்பி வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஊழல் புகார் கூறிய சென்னை மாநகராட்சி த.மா.கா எதிர்க்கட்சித் தலைவர்வெற்றிவேல் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நலத்துறை அமைச்சர் ஆர்க்காடுவீராசாமியின் தம்பி தேவராஜன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக தேவராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புகார்மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 30 வருடமாக விளம்பரப் பலகைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறேன். 1972-ம் ஆண்டு முதல் இதற்காகமுறையாக வரியும் கட்டி வருகிறேன்.சராசரியாக மாதம் ரூ. 18 லட்சம் அளவுக்கு வரிகட்டி வருகிறேன்.

அமைச்சரின் தம்பி என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, மாநகராட்சிக்குச்சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை நான் என் மகள்களின் பேரில் முறைகேடாகஆக்கிரமித்துக் கொண்டதாக தமாகா தலைவர் வெற்றிவேல் என் மீது அவதூறு புகார்கூறியுள்ளார்.

இந்த இடத்தைத் தனியாரிடமிருந்துதான் நான் வாங்கினேன். இதுதொடர்பாக விளக்கம்அளித்து, 2 முறை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் தொடர்ந்து தவறாக பேசி வருகிறார்வெற்றிவேல்.

இதனால் நானும் எனது சகோதரர் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் மன உளைச்சல்அடைந்துள்ளோம். எங்களைப் பற்றி தவறாக பேசுவதற்கு வெற்றிவேலுக்குத் தடைவிதிக்க வேண்டும்.

எங்களது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதற்காக ரூ. 1 கோடிநஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X