ஊழலை அம்பலமாக்கிய தெகல்கா
டெல்லி:
அகில இந்திய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் லஞ்சம் வாங்கியதை தெகல்கா டாட் காம் என்றஇன்ட்ர்நெட் நிறுவனம் அம்பலமாக்கியது.
இந்திய ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவது தொடர்பாக ஆயுத நிறுவன ஏஜன்ட்டுகளிடம் லஞ்சம் வாங்கினார் பங்காரு லட்சுமண்என்பதே முக்கியக் குற்றச்சாட்டு.
அதாவது,இன்டர்நெட் நிறுவனத்தைச் சேர்ந்த 2 நிருபர்கள் வெஸ்ட் என்ட் என்ற வெளிநாட்டு ராணுவ தளவாடநிறுவனத்தைச் சேர்ந்த ஏஜன்டுகள் போல் நடித்து அரசியல்வாதிகளையும், பல ராணுவத் தலைவர்களையும் நேரில் சந்தித்துப்பேசியுள்ளனர்.
அப்போது பணம் கைமாறிய காட்சியை மறைத்து வைத்திருந்த வீடியோ காமிராவில் படம் பிடித்தனர். அதை அடிப்படையாக வைத்துஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண், சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லே, சமதா கட்சி பொருளாளர்ஆர்.கே.ஜெயின் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இந்த வீடியோ படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
பங்காரு லட்சுமண் பணத்தை வாங்கி மேஜையில் வைக்கும் காட்சி வீடியோவில் தெளிவாகப் படம் பி-டிக்-கப்-பட்-டுள்-ள--து.
அதுபோல் ஜெயா ஜெட்லே, இந்தப் பணத்தை சமதா கட்சியின் மத்திய அமைச்சர் சீனிவாச பிரசாத்திடம் கொடுத்து விடுங்கள்என்று சொல்வது போன்ற காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோவை முக்கியப் பிரமுகர்களுக்குப் போட்டுக் காட்டிய தெகல்கா இன்டர்நெட் நிறுவன தலைவர் தரூண் தேஜ்பால்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஆயுத ஏஜன்டுகள் போல் நடித்த இரண்டு நிருபர்களும் பங்காரு லட்சுமணனுக்கு ரூ 1 லட்சமும், ஜெயா ஜெட்லேவுக்கு 2லட்-ச-மும், ஆர்.கே.ஜெயி-னுக்-கு ரூ 50 ஆயி-ர-மும் கொ-டுத்-த-தா-கக் கூறி-னார்.
இந்திய ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவதில் எந்த அளவுக்கு ரகசியப் பேரம் நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தவே இந்தவீடியோ படத்தை தயாரித்தாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications