புதனுக்குள் திமுக தொகுதிப் பங்கீடு முடியும்
சென்னை:
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு வரும் புதன்கிழமைக்குள் முடிவடைந்து விடும் என்று அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட கட்சிகளுடன், அமைச்சர்ஆர்க்காடு வீராசாமி தலைமையிலான திமுக குழு ஈடுபட்டுள்ளது.
பல்வேறு கட்சிகளுக்கு இதுவரை தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. கடைசியாக வெள்ளிக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 7 சீட்டுக்களும்,கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
இந்த இரு கட்சிகளும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்க்காடு வீராசாமி, வருகிற புதன்கிழமைக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பான அனைத்துநடவடிக்கைகளும் முடிவடைந்து விடும்.
மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு ஞாயிற்றுக்கிழமை இறுதி செய்யப்பட்டு விடும். புதிய தமிழகம் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு இன்னும் 2 நாட்களில்முடிவாகி விடும். பிற கட்சிகளுக்கும் விரைவில் முடிந்து விடும் என்றார் வீராசாமி.