For Daily Alerts
Just In
ஊழலை ஒழிக்க தேர்தல் சீர்திருத்தம் தேவை: விட்டல்
உதய்பூர்:
பெருகி வரும் லஞ்ச ஊழலை தடுக்க தேர்தல் முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என கோருகிறார் மத்திய கண்காணிப்புத்துறை ஆணையர் விட்டல்.
உதய்பூரில் நிருபர்களிடம் பேசிய விட்டல், தனியார் வெப்சைட் நிறுவனம் வெளிப்படுத்திய ஆயுத பேர ஊழலை தொடர்ந்து நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல்நடவடிக்கைகளில் சீர்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முயல வேண்டும்.
கட்சிகள் நன்கொடை பெறுவதற்கான நடைமுறைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஊழலை ஒழிக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுஉள்ளன.
ஆனால், அவற்றை செயல்படுத்த அரசாங்கங்கள் தயக்கம் காட்டுவதால் சட்டங்கள் பயனின்றி இருக்கின்றன என தெரிவித்தார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, March 18, 2001, 5:30 [IST]