கோவை பல்கலை.யில் புதிய நில ஆய்வு மையம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தில் ரூ. 38 லட்சம் செலவில் புதிய நில பயன்பாட்டு திட்ட ஆராய்ச்சி துவங்கப்படவுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கன்னையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வேளாண் உயிரியல் முறைக்கேற்ப நிலப் பயன்பாட்டை அதிகரிக்க வேளாண் உயிரியல்மண்டலங்களாக பிரித்து ஆய்வு நடத்த அரசு திட்டங்கள் தீட்டி வருகிறது.

இந்த ஆராய்ச்சியில் இந்தியாவில் உள்ள கடலோரப் பகுதியில் தொலை நோக்குப் பார்வையுடன் காடுகள் உருவாக்கப்படுகிறது.இந்த ஆராய்ச்சியில் வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்துடன் மற்ற பல்கலைக் கழகங்களும் இணைந்து செயல்படுகின்றன.

புதிய நிலப் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிலப் பயன்பாடு நில உற்பத்தி திறன், மண்வளம், நீர் வளம், தட்ப வெப்ப நிலை,கால்நடை, இயற்கை வளங்கள் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்படும்.

இவை குறித்த அனைத்து புள்ளி விபரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு நில மதிப்பீட்டு சாஃப்ட்வேர்உருவாக்கப்படும். தேசிய அளவிலான இந்த ஆராய்ச்சி திட்டம் 3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்.

இந்தியாவில் உள்ள 11 ஆராய்ச்சி நிலையங்களுக்கு 64 லட்ச ரூபாய் இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும். கோவையைதலைமை நிலையமாகக் கொண்ட இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு 38 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

இந்த நிதியில் ராமநாதபுரம், கிள்ளிகுளம், ஆடுதுறை போன்ற ஆராய்ச்சி நிலையங்களிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் எனஅவர் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+