கட்சிக்கு சின்னம் பெற டெல்லி விரைந்தார் சிதம்பரம்
சென்னை:
த.மா.கா. ஜனநாயக பேரவைத் தலைவர் சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றுள்ளார். இவர் தேர்தல் ஆணையத்தில் தம் புதிய கட்சியை பதிவுசெய்வதற்கும், கட்சிக்கு சின்னம் பெறவும் டெல்லி சென்றுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ், அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பதை த.மா.கா கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்ருமான ப. சிதம்பரம் ஆரம்பம்முதலே எதிர்த்து வந்தார்.
மூப்பனார் அ.தி.மு.கவுடன் தேர்தல் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதும் சிதம்பரம் த.மா.கவிலிருந்து பிரிந்து த.மா.கா. ஜனநாயக பேரவை என்ற புதியஅமைப்பை துவக்கினார்.
சிதம்பரம் தேர்தலில் தி.மு.க. அணியில் இணைந்து போட்டியிடவிருக்கிறார். தமிழக முதல்வரும். தி.மு.க. தலைவருமான கருணாநிதியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். ஆனால் சிதம்பரத்துக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது முடிவாகவில்லை. 5 தொகுதிகள் ஒதுக்கப்படலாம்என கூறப்படுகிறது.
இந்நிலையில் சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி சென்றுள்ளார். தேர்தல் ஆணையத்தில் தமது கட்சியின் பெயரை பதிவு செய்யவும், தனதுகட்சிக்கான தேர்தல் சின்னம் பெறுவதற்காகவும் அவர் டெல்லி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications