இன்றைய தினப்பலன்
ஜானகி மந்திரி சபை வந்த போது, அதை காங்கிரஸ் கவிழ்ப்பது, காங்கிரஸுக்குநல்லதல்ல என்று ராஜீவ் காந்தியிடம் பேசி, அந்தப் பேச்சு எடுபடாமல் போனதையும்பார்த்தவன்.
சந்திரசேகர் பிரதமரான போது சில அரசியல் செயல்பாடுகளில் இறங்கியவன்:சந்திரசேகர் - ராஜீவ் மோதல் ஏற்பட்ட போது அதைத் தவிர்க்க முனைந்து தோற்றவன்.
தி.மு.க. அரசு டிஸ்மிஸ் ஆகவேண்டும் என்று பிரதமர் சநதிரசேகரிடம்வாதிட்டவர்களில் ஒருவன்: அன்றைய நிலையில் ஜெயலலிதா அரசியலை விட்டுவிடக் கூடாது என்று வற்புறுத்தியவன்.
ஜெயலலிதா அப்போது காங்கிரஸ் உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றுவாதாடியவன்: ராஜீவ் காந்தியிடம் சில கருத்துக்களைக் கூற, அவர் அவற்றைஏற்றதைக் கண்டவன்.
வாஜ்பாய் மந்திரி சபை முதலில் வந்த போது, அதற்கு ஆதரவு தேட முனைந்து தோல்விகண்டவன்: த.மா.கா. உருவாவதற்கும். தி.மு.க. வுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்வதற்கும் உதவி செய்தவர்களில் ஒருவன்.இவற்றில் ரஜினி காந்த் முக்கிய பங்குவகிப்பதற்கு உழைத்தவன்.
பா.ஜ.க. நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வந்த போது, அதற்கு த.மா.கா. அதரவைப்பெற முயற்சித்துத் தோற்றவன்: பா.ஜ.க.வுக்கு அப்போது தி.மு.க.ஆதரவைப் பெறமுயற்சித்து அது நிறைவேறியதைப் பார்த்தவன்.