இன்றைய தினப்பலன்
இப்படி பற்பல நேரங்களில் அன்றைய சூழ்நிலையில் எது நல்லது என்று தீர்மானித்து,அந்த என் கருத்துப்படியான நன்மை நடப்பதற்காக, பல முயற்சிகளை எடுத்து, வெற்றி,தோல்வி இரண்டையும் சந்தித்தவன் நான். இவற்றில் பலவற்றை பலர் அறிவார்கள்.
இந்தப் பின்னணியின் காரணமாக - இப்போது சட்டசபைத் தேர்தல் வருகிற நேரத்தில்,ஜெயலலிதாவுடனான என் சந்திப்புகள், சில பத்திரிக்கையாளர்கள் மனதில்உண்மையிலேயே இவன் எதற்காகவோ முனைகிறான் என்ற எண்ணத்தைத்தோற்றுவித்திருக்கலாம்.
தி.மு.க. பற்றிய என் கடுமையான விமர்சனத்தை, வீரப்பன் விவகாரம்தொடங்கியதிலிருந்து இவர்கள் கவனித்திருக்கலாம்.
அந்தச் சூழ்நிலையில் ஜெயலலிதா சந்திப்புகள்என்றவுடன், சரி, இவன் ஏதோசெய்கிறான் என்று அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இப்படிப்பட்டபத்திரிக்கைகள், பத்திரிக்கையாளர்கள் ஒரு புறம்.
மற்றொருபுறத்தில், பரபரப்பாக செய்தி வெளியிட கிடைத்தது ஒரு சந்தர்ப்பம் என்றுஇதில் இறங்கிய பத்திரிக்கைகளும் இருக்கலாம்.
இவை இரண்டும் போக, மூன்றாவது ரகமும் உண்டு. இந்த வகைக்குச் சிலஉள்நோக்கங்கள் உண்டு. பா.ஜ.க.வுடன் நெருங்குவதற்கு ஜெயலலிதா முனைகிறார் -என்று கூறி, த.மா.கா., கம்யூனிஸ்ட்கள் போன்றவர்களுக்கு ஜெயலலிதா மீதுசந்தேகத்தைக் கிளப்ப வேண்டும்.
ரஜினியுடன் பேச சோ உதவியை ஜெயலலிதா நாடுகிறார் என்று சொல்லி - ரஜினிக்கும்,சோவிறகுமிடையே ஒரு சந்தேகச் சூழலை உருவாக்க வேண்டும்.
த.மா.கா.வை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள ஜெயலலிதா முனைகிறார் என்றுசொல்லி, அவருக்கு பயம் வந்திருக்கிறது என்று காட்ட வேண்டும்:
வழக்குகள் பற்றி சோவுடன் ஆலோசனை என்று சொல்லி, அவருடையஆலோசர்களிடையே ஒரு மனக்கசப்பை தோற்றுவிக்க வேண்டும் ... என்பது போன்றஉள்நோக்கங்களுடன் இந்த வகையானவர்களும் கற்பனைகளை, செய்திகளாகப்பரப்பினார்கள், வெளியிட்டார்கள்.