இன்றைய தினப்பலன்
அவர்களுடைய கருத்துக்களையும் அறிந்து கொண்டேன். ஆனால் யாரும் என்னிடம்எந்த உதவியும் கேட்கவில்லை. யாரையும் கூட்டணியில் சேர்த்து வைப்பதற்கும் என்உதவி நாடப்படவில்லை.
அதே சமயத்தில், நான் தெரிவித்த என்னுடைய கருத்துக்கள் அவர்கள் சிந்தனையில்ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அப்படி நடந்ததா, நடந்திருந்தால் எந்தஅளவில் பாதித்தது, என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
நான் ஓர் அரசியல்வாதியை சந்திப்பதே தவறு என்று யாராவது நினைத்தால் நான்என்ன செய்வது? பா.ஜ.க.,த.மா.கா., காங்கிரஸ்,, தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட்.,பா.ம.க., ம.தி.மு.க.,புதிய தமிழகம்., புதிய நீதிக் கட்சி - போன்ற பல கட்சிகளைச்சார்ந்த அரசியல்வாதிகளை நான் சந்திக்கிறேன்.
அவர்களும் வந்து என்னைப் பார்ப்பார்கள்: நானும் சென்று அவர்களைப் பார்ப்பேன்.கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். இவர்கள் சார்ந்துள்ள கட்சிகள்எல்லாவற்றையுமே நான் விமர்சித்திருக்கின்ே.
சில நிகழ்ச்சிகளையும், சில அரசியல் சூழ்நிலைகளையும் பொறுத்தும், அவற்றுக்குஅந்தந்த கட்சியின் அணுகுமுறையைப் பொறுத்தும் என் விமர்சனங்கள் சில சமயம்கடுமையாகவும் அமைவதுண்டு.
இவர்களில் - இப்படி என்னால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள் - யாரையுமேநான் சந்திக்கக்கூடாது என்றால், அதன் பிறகு நான் தனக்குத்தானே பேசிக் கொள்ளவேண்டியதுதான். அது கூட முடியாது. ஏனென்றால் என்னையும் நானே விமர்சித்துக்கொள்கிறேனே!
நான் முன்பு, இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க அறிவாலயம்சென்று, த.மா.கா.,கூட்டணிக்காக அவரிடம் பேசிய போது, துக்ளக் வாசகர்கள்கடுமையான கண்டனம் தெரிவித்தார்கள்.
பல கட்டுரைகள் எழுதி, என் நிலையை விளக்கினேன். இப்போது ஜெயலலிதா சந்திப்புபற்றி கடும் எதிர்ப்பை வாசகர்களில் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட ஒரு வாய்ப்பு சட்டப்படி வரக்கூடும் - என்றகருத்தை நான் தெரிவித்தது, ஜெயலலிதா சந்திப்பிற்கு பிறகுதான் - என்ற சந்தேகம்பலருக்கு வந்தது.












Click it and Unblock the Notifications