போலீஸ்காரர் மகளை கடத்திய போலீஸ்காரர் மகன்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் போலீஸகாரர் மகளைக் கடத்திய மற்றொரு போலீஸ்காரரின் மகனைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் குணசேகரன். போலீஸ்காரரான இவர் மகள் பிரியதர்ஷினியை (17)சம்பத் என்பவர் கடத்திச் சென்று விட்டார்.
தனது மகளை கடத்திச் சென்ற சம்பவத்தால் அவமானம் அடைந்த குணசேகரன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் மகள் கடத்தப்பட்டது பற்றி அவரது தாய் கீதா போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துபிரியதர்ஷினியைக கடத்திச் சென்றதாக சம்பத்தை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications