சிதம்பரம் விலகலால் பாதிப்பில்லை: த.மா.கா
சேலம்:
சிதம்பரம் எடுத்த முடிவு 60 நாள் அற்புதம், அவர் விலகிச் சென்றதால் பாதிப்பு எதுவும் இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் பொது செயலர் பீட்டர்அல்போன்ஸ் தெரிவித்தார்.
சேலத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சிதம்பரம் எடுத்த முடிவு, வாக்காளர்களையும், மக்களையும் திசை திருப்ப எடுத்த முடிவாகும். எங்கள்இயக்கம் எந்த ஒரு தனி நபரையும் சார்ந்திருக்கவில்லை. சிதம்பரம் எடுத்த முடிவால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
சொல்லப்போனால், சிதம்பரம் எடுத்த முடிவு 60 நாள் அற்புதம் தான். ஜனநாயகத்தில் பெரும்பான்மையானவர்கள் எடுக்கும் முடிவு தான் செல்லும்.அதனை ஏற்றுக் கொண்டு சகிப்புத் தன்மையுடன் செயல்படுவது தான் ஜனநாயக மரபு. அவர்கள் தான் கட்சிக்கு உண்மையான தொண்டனாக,விசுவாசிகளாக இருக்க முடியும்.
சிதம்பரத்தை மூப்பனார் தான் நிதியமைச்சராக்கினார். அவரைக் கேட்டா நிதியமைச்சர் பொறுப்பை வாங்கிக்கொடுத்தார். சிதம்பரம் சென்று விட்டதால் எந்தக் குழப்பம் இல்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப்படுமா என்பது பற்றி மூப்பனார் தான் முடிவு செய்ய வேண்டும்.
போலி கம்பெனியிலிருந்து ஆயுத பேர ஊழலை விசாரிக்க வேண்டும். மனசாட்சி உள்ளவர்களாக இருந்தால்வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் பதவி விலகியிருக்க வேண்டும். அவர்கள் பதவியில் நீடிக்க தார்மீகஉரிமை இல்லை. இக் கட்சியின் முகமூடி கிழிந்து விட்டது என்றார் பீட்டர் அல்போன்ஸ்.












Click it and Unblock the Notifications