இன்னும் முடியவில்லை அடையாள அட்டை வழங்கும் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வாக்காளர்கள் அடையாள அட்டை வழங்கும் பணி முடிவு அடையவில்லை.

வரும் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க அடையாள அட்டை அவசியம் என்ற தேர்தல் ஆணையத்தின்உத்தரவு மாற்றப்படலாம்.

கடந்த 97ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான்குஆண்டுகள் முடிந்த பின்னும் அடையாள அட்டைகள் வழங்கும் பணி முடியவில்லை.

புகைப்படம் எடுக்கப்பட்ட வாக்காளர்கள் பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால்,அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. வாக்காளர்கள் பலரின் அடையாள அட்டையில்புகைப்படம் மாறி இருப்பதால் திருப்பி அளித்து விட்டனர்.

அடையாள அட்டை பெறாத வி.ஐ.பி.லிஸ்டில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனும், தமிழகஅமைச்சர் ஆற்காடு வீராசாமியும் அடக்கம். அமைச்சரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. சேஷனுக்கு 2முறை புகைப்படம் எடுத்தும் அடையாள அட்டை தரப்படவில்லை.

கருத்தரங்கு ஒன்றில் பேசிய சேஷன் அனைவருக்கும் அடையாள அட்டை அளித்த பின்பே வாக்கு அளிக்கஅடையாள அட்டையை கட்டாயப்படுத்த வேண்டும் என்றார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி, அடையாள அட்டைவழங்கும் பணி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் அடையாள அட்டைகளை வீடுவீடாக சென்று அளித்து விட்டதாக கூறி உள்ளனர்.

அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றார்.

மார்ச் 25ம் தேதிக்குள் அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு உள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+