வாஜ்பாய்க்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு வாபஸ்
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளராக ஜார்ஜ் பெர்னான்டஸ் தொடர்ந்து நீடிப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களில் ஒருவரான ஹெக்டே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டி:
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டால் தனது பதவியைராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளராக அவர் நீடிப்பார் என்று கூறுவது தவறு.குற்றம்சாட்டப்பட்டவர் கூட்டணியின் அமைப்பாளராக இருக்கக் கூடாது. இதைக் கண்டித்து ஐக்கிய ஜனதா தளம்தேசிய ஜனநாயகக் கூட்டியிலிருந்து விலகுகிறது என்றார்.
ஏற்கனவே ஆயுதப் பேர ஊழல் தொடர்பாக ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்துள்ளார். திரினாமுல் காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த மம்தா பானர்ஜி மற்றும் அஜித் குமார் பாஞ்சா ஆகியோரும் ராஜினாமா செய்து விட்டனர்.
இவர்கள் தவிர நிதிஷ்குமார், சீனவாச பிரசாத், திக் விஜய் சிங் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 6 எம்.பி.க்களின் பலம் குறைந்து விட்டது.
மேலும் ஐக்கிய ஜனதா தளமும் இப்போது தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளதால்வாஜ்பாய் அரசுக்கு மேலும் 6 எம்.பி.க்களின் ஆதரவு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.