சிதம்பரம் தாக்கப்பட்ட வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மாலாவிடுவிக்கப்பட்டார்.

1991-ம் ஆண்டு திருச்சி விமான நிலையம் அருகே முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக அ.தி.மு.கவினர் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் அ.தி.மு.கவினரால் தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ரத்தினவேல், முன்னாள் எம்.பி. ராஜரத்தினம், முன்னாள்எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், ஆரோக்கியசாமி சிவபதி, மாலா உள்ளிட்ட 64 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலரும் விடுவிக்கப்பட்டனர். ஒரு சிலருக்கு மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் அனைவருமேமாவட்ட கூடுதல் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மாலா வெளிநாட்டில் இருந்ததால் அவர் மீதான வழக்கு தனி வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.

மாலா வெளிநாட்டிலிருந்து வந்ததும் அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. தற்போது அவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தற்காலிமாக நீதிபதி உமா மகேஸ்வரி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

1991-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி சிதம்பரம் தாக்கப்பட்ட வழக்கில் மாலா சம்பந்தப்பட்டிருப்பதற்கான எந்த ஆதராமும் இல்லை.எனவே அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+