For Daily Alerts
Just In
நாடு முழுவதும் பேரணிகள் நடத்துகிறது காங்கிரஸ்
டெல்லி:
ஆயுத பேர ஊழல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட நாடு முழுவதும் பேரணிகளை நடத்த காங்கிரஸ்திட்டமிட்டுள்ளது. முதல் பேரணி ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது.
இது குறித்து அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்பல் ரெட்டி கூறுகையில்,
பா.ஜ.க. என்றால் தேசிய உணர்வு, உயர்ந்த கொள்கைகள் என்ற மாயை நிலவி வந்தது. இப்போது அது தகர்ந்துவிட்டது.
பா.ஜ.காவின் ஊழல் குறித்து டெல்லியில் முதல் பேரணி நடத்தப்படும். இரண்டாவது பேரணி வரும் ஏப்ரல் 4ம் தேதிஹைதராபாத்தில் நடத்தப்படும்.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மாவட்ட அளவிலும், சிறிய நகரங்களிலும் கூட இந்த விழிப்புணர்வுப் பேரணிகள்நடத்தப்படும் என்றார்.
Comments
Story first published: Friday, March 23, 2001, 5:30 [IST]