சேலம் அருகே நடுவானில் மோதவிருந்த விமானங்கள்
சேலம்:
சேலம் அருகே நடுவானில் மோதவிருந்த இரண்டு விமானங்கள், பெங்களூர் விமான நிலைய எச்சரிக்கையால்தப்பியது.
கோழிக்கோடு செல்ல சென்னையிலிருந்து ஒரு விமானம் புறப்பட்டது. இந்த விமானம் இந்தியன் ஏர்லைன்ஸ்ஏர்பஸ் 320 வகையைச் சார்ந்தது.
சேலம் மாவட்டத்தின் மீது 33 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஜெர்மனியைச்சேர்ந்த லுப்தன்சா ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் ஒன்று அதன் அருகில் பறந்து வந்தது.
இந்த விமானம், 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இரண்டு விமானங்களும் மிக அருகில்வந்ததை பெங்களூர் விமானக் கட்டுப்பாட்டு அறை கண்டுபிடித்தது.
உடனே இரண்டு விமானங்களுக்கும் வெவ்வேறு பாதைகளைக் கூறி பாதையை மாற்றியது. இதனால் இருவிமானங்களும் நடுவானில் மோதுவது தவிர்க்கப்பட்டது.
ஏன் இவ்வாறு இரு விமானங்களும் நெருங்கின? தவறு எங்கு ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? என்பது குறித்துவிமான நிலையங்களில் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications