ஜப்பானில் நிலநடுக்கம்: 2 பெண்கள் சாவு
டோக்கியோ:
ஜப்பானின் மேற்குப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 3.28 மணிக்கு 6.4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
நிலநடுக்கம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தி:
நிலநடுக்கம் தலைநகர் டோக்கியோவிலிருந்து 690 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹிரோஷிமாவில் ஏற்பட்டது. ஹிரோஷிமாவில் உள்ள க்யூரி என்றஇடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
இதே போல் மேட்ஸ்யூயாமாவில் பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
சீனாவில் லேசான நிலநடுக்கம்:
சீனாவின் வடமேற்குப்பகுதியில் சனிக்கிழமை காலை 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கத்தில் பொருட்சேதம், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து சீனா பூகம்பவியல் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சனிக்கிழமை காலை 7.13 மணிக்கு ஹிஜிங் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது.இதில் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வரவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications