வாஜ்பாய் பதவி விலக மாட்டார்: பா.ஜ.க. அறிவிப்பு
டெல்லி:
ஆயுதப் பேர ஊழலுக்கு பொறுப்பேற்று வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என பா.ஜ.க.தலைவர்களில் ஒருவரான மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் சனிக்கிழமைதிட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது நியாயமற்றது. அர்த்தமில்லாதது என்றும்அவர் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஆயுதப் பேர ஊழல் குறித்து தெஹல்கா வெளியிட்டுள்ள ஆதாரங்கள் போதுமானவையா என்பது குறித்து எதுவும்கூற முடியாது. எந்தக் குற்றமும் நிருபிக்கப்படும் முன் அதுகுறித்துக் கருத்துக் கூறுவது தவறு.
ஆயுதப்பேர ஊழல் இதுவரை எதுவும் நிருபிக்கப்படவில்லை. அதனால் வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும்என்று காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகள் வலியுறுத்துவது தவறு என்றார்.
மத்திய ஊழல் தடுப்புக் கண் காணிப்புத்துறை ஆணையர் விட்டல் நிரபர்களிடம் கூறுகையில், இந்தியாவில்மிகப்பெரிய பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற ஆயுதப் பேர ஊழலில் சிக்கியிருப்பது வருத்தப்பட வைக்கிறதுஎன்றார்.
வாஜ்பாய் பேட்டி:
தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் பாண்டிச்சேரியில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளதால்எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சனையை பெரிதுபடுத்துகின்றன.
தேர்தல் முடிந்ததும் இந்தப் பிரச்சனை அமுங்கிப் போய்விடும்.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி பதவி ஏற்றபின் கடந்த 3 நாட்களாக பலபிரச்சனைகளை சமாளித்துள்ளது. அதே போல் ஆயுதப்பேர ஊழல் குறித்தும் அடுத்த இரண்டு ஆண்டுகளில்சமாளித்து விடுவோம் என்றார் வாஜ்பாய்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications