கூட்டணி குறித்து கருணாநிதி - சண்முகம் ஆலோசனை
சென்னை:
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியைசந்தித்து தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சண்முகம் கூறியதாவது:
தேர்தல் கூட்டணி குறித்து கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். ஆனால் இன்னும் தி.மு.கதலைமையிலான தே.ஜ. கூட்டணியில் இணைவதா என்பது குறித்து முடிவு செய்யவில்லை.
மார்ச் 26-ம் தேதி நடக்கவிருக்கும் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தின் போது இறுதி முடிவு எடுக்கப்படும்.
எங்கள் கட்சி உறுப்பினர்களிடையே தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது தி.மு.க. தலைமையிலானகூட்டணியில் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது.
தி.மு.க. தலைவர் எங்களுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் குறித்து கூறினார். எத்தனை தொகுதிகள் என நான்கூற விரும்பவில்லை என்றார்.
புதிய நீதிக்கட்சிக்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்குவதாக தி.மு.க. கூறியிருப்பதாக தெரிகிறது.
சண்முகத்துடன் பேச்சு வார்த்தை நடத்திய பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியதாவது:
நாங்கள் எத்தனை தொகுதிகள் ஒதுக்கத் தயாராக இருக்கிறோம் என சண்முகத்திடம் கூறினோம். அவர் தங்களுக்குஎத்தனை தொகுதிகள் வேண்டும் என கூறினார். தங்கள் கட்சி நிலை குறித்து சனிக்கிழமை தெரிவிப்பதாககூறியுள்ளார்.
அவர் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைவரா, மாட்டாரா என்பது எனக்கு தெரியாது. நாங்கள் புதியநீதிக்கட்சியின் பலத்தை குறைத்து எடை போட விரும்பவில்லை.
வாழப்பாடி ராமமூர்த்தி தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகள் போதாது என கூறியுள்ளார். இதையடுத்துகூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட இயலாது என அவருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications