சிங்கப்பூரில் பூனைக்குட்டியை கொன்ற இந்தியருக்கு சிறை
சிங்கப்பூர்:
பூனைக்குட்டியை கொன்ற இந்தியருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்துதீர்ப்பளித்துள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம்.
கதன் கோவிந்தராஜ் (36) என்ற இந்தியர் சிங்கப்பூரில் வசித்து வந்தார். சென்ற ஆண்டுஅக்டோபர் மாதம் இவர் இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தினருடன்தொலைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது கால் அருகே வந்து மோப்பம் பிடித்த பூனைக் குட்டியைகோபத்துடன் எட்டி உதைத்தார். இதில் அந்த பூனைக் குட்டி இறந்து போனது. இந்தசம்பவத்தை இளைஞர் ஒருவர் பார்த்து போலீசில் புகார் செய்து விட்டார்.
பூனைக் குட்டியை கொன்ற குற்றத்திற்காக கோவிந்தராஜுக்கு இரண்டு வார காலம்சிறை தண்டனை அளித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விசாரணையின் போது கோவிந்தராஜ், நான் என் இந்தியாவிலிருக்கும் என்குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என் மகன்பாம்பு கடித்து இறந்து விட்டதாக தெரிய வந்தது.அப்போது பூனைக் குட்டி தொந்தரவுசெய்ததால் எட்டி உதைத்தேன். அது இறந்து விட்டது என்றார்.
யு.என்.ஐ.