தேர்தலில் குதிக்கும் ஆசிரியர்கள்
சென்னை:
ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட தமிழக விழிப்புணர்ச்சிக் கழகம் என்ற புதிய கட்சிவரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் நிறுவனதலைவர் குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமையன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் கட்சி 10தொகுதிகளில் போட்டியிடும்.நான் புதுக்கோட்டை மாவடம் திருமயம்தொகுதியிலிருந்து போட்டியிடவிருக்கிறேன்.
வேறு எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும், வேட்பாளர்கள்குறித்த விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் சட்டசபையில் எடுத்து கூறப்பட வேண்டும்என்பதற்காகத் தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள்தி.மு.க. தலைமையிலான அணியிலோ அல்லது அ.தி.மு.க. தலைமையிலானஅணியிலோ இணைந்து போட்டியிட தயாராக இருக்கிறோம்.
தி.மு.க. எங்களை அவர்கள் அணியில் இணையச் சொன்னது. ஆனால், அவர்கள்எங்கள் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட எந்த தொகுதியும் கொடுக்க முன்வரவில்லை.ஆனால் அ.தி.மு.க. எங்களை பேச்சு வார்த்தைக்குக் கூட கூப்பிடவல்லை.
எங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னத்தைக்கொடுக்குமாறு தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்ளவிருக்கிறோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications